மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கியது
மதுரை:
பிரசித்து பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன்தொடங்கியது.
தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் ஒன்று மதுரை சித்திரைத் திருவிழா.
விழாவையொட்டி இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கொடிக் கம்பத்திற்கு தீப ஆராதனை செய்யப்பட்டது. இதில்பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கி. இந்த விழா 12 நாட்கள் நடக்கும். இந்த நாட்களில் தினமும் அம்மனும், சுவாமியும் நான்கு மாசிவீதிகளிலும் உலா வருவார்கள்.
பட்டாபிஷேக நிகழ்ச்சி வருகிற 29ம் தேதியும், மே 1ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 2ம் தேதி காலைதேரோட்டமும், மே 4ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
விழாவைவொட்டி மதுரையில் விரிவான பாதுகாப்பு ஏற்படுகளை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது.