அட்சய திருதியை: 33 அதிமுக வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல்
சென்னை:
அதிமுக வேட்பாளர்கள் 33 பேரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள்ஆகும்.
அதிமுக தவிர்த்த, பிற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக மும்ரமாக மனு தாக்கல் செய்துவருகிறார்கள்.
அமாவசை முடிந்து வளர்பிறையில் வேட்பாளர்களை மனு தாக்கல் செய்ய வைக்குமாறு போயஸ்தோட்டத்து ஆஸ்தான ஜோதிடர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்திருந்தனர். இந் நிலையில் இன்று(வியாழக்கிழமை) அட்சய திருதியை நாள் என்பதால் இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு 33வேட்பாளர்களுக்கும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் இன்று காலை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் இந்த நல்லநாளுக்காகக் காத்திருந்து இன்று தான் மனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக அண்ணாஅறிவாலயம் சென்று அறிஞர் அண்ணா சிலைக்கும், மாறன் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.












Click it and Unblock the Notifications