செருப்பு ஊழல் வழக்கில் இந்திரகுமாரி- ஈஸ்வரமூர்த்தி விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஏழை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில்இருந்து முன்னாள் அமைச்சர்களான இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை விடுவித்து இன்று மாலைசென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த நெடுஞ்செழியன், இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்திஉள்ளிட்ட 21 பேர் மீது இலவச செருப்பு வழங்கியதில் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாக திமுக ஆட்சிக் காலத்தில்தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் நெடுஞ்செழியன் உள்ளிட்ட 2 பேர் விசாரணைக் காலத்தில் இறந்து விட்டனர். மற்ற 19 பேர் மீது தொடர்ந்துவிசாரணை நடந்தது. இதில் 188 பேர் அரசு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்து கடந்த7ம்தேதியே தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி மதிவாணன் அறிவித்திருந்தார்.

பின்னர் தீர்ப்பு 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அன்றும் தீர்ப்பு தயாராகாததால் 22ம் தேதிக்கு (இன்று)ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி மதிவாணன்,

இந்த வழக்கில் இருந்து இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன்உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டார். இவர்களுக்கு எதிரானகுற்றச்சாட்டுக்கள் சரிவர நிரூபிக்கப்படாததால் இவர்களை விடுவிப்பதாக தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+