For Daily Alerts
Just In
தவறாமல் ஓட்டு போடுங்க: சங்கராச்சாரியார் வேண்டுகோள்
திருச்சி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளதுபடி, ஓட்டுப் போடுவது நமது புனிதக் கடமை. எனவே தமிழகவாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கோரிக்கைவிடுத்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அப்துல் கலாம் ஓட்டுப் போடுவது புனிதக் கடமை என்றுமிகச் சரியாக குறிப்பிட்டுள்ளார். எனவே வாக்காளர்கள் அனைவரும் அதை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.
நாட்டில் இப்போது வன்முறை, வெறுப்பு ஆகியவை அதிகரித்து விட்டது. இவை இல்லாத அரசியலே இல்லைஎன்றாகி விட்டது. இதை துடைத்தொழிக்க வேண்டும் என்றார் அவர்.
பின்னர் திருவானைக்காவல் சங்கரா மடத்தில் மழை வேண்டி வருண ஜெபத்தையும் அவர் நடத்தினார்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, April 22, 2004, 5:30 [IST]