வன்முறை பாதையில் பாமக.: பாஜக குற்றச்சாட்டு
சென்னை:
ஜனநாயகப் பாதையிலிருந்து விலகி வன்முறை அரசியலில் ஈடுபட்டு வருகிறார் டாக்டர் ராமதாஸ் என்று பாரதியஜனதாக் கட்சி கூறியுள்ளது.
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், டாக்டர் ராமதாஸ்தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிவிட்டது. இப்போது அந்தக் கட்சிவன்முறை அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
அக் கட்சியினரின் அடாவடிகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
புதுவையில் பாமக தொண்டர்களுக்கு சாராயம் கொடுத்து அவர்களை ஊக்குவித்து வருகிறது பாமக. இதுஅப்பட்டமான தேர்தல் விதிமீறல் மட்டுமல்ல, அசிங்கமான செயல்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரசாரத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதிசென்னைக்குப் பதிலாக நாகர்கோவிலில் அவர் பிரசாரம் செய்கிறார்.
தர்மபுரியில் 6ம் தேதி பிரசாரம் செய்யவிருந்த மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தர்மபுரிக்குப் பதிலாகநீலகிரி, கோவையில் பிரசாரம் செய்கிறார். வெங்கைய்யா நாயுடுவின் நாகர்கோவில் பிரசாரம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 7ம் தேதி புதுவைக்குப் பதிலாக தர்மபுரியில் பிரசாரம் செய்கிறார் என்றுகூறினார்.