திமுகவினரின் அன்பு மழையில் ராதிகா செல்வி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராதிகா செல்வி, 3 மாவட்டதிமுகவினரின் அன்பு மழையில் நனைந்தார்.
சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி திருச்செந்தூர்தொகுதியில் திமுக வேட்பாளராக நிற்கிறார். அவரது வெற்றிக்காக தூத்துக்குடியைச் சேர்ந்த திமுகவினர்மட்டுமல்லாது திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட திமுகவினரும் மிகத் தீவிரமாக பாடுபட்டு வருகின்றனர்.
ராதிகா செல்வி வேட்பு மனு தாக்கல் செய்ததையொட்டி 3 மாவட்ட திமுக தலைவர்களும், தொண்டர்களும்தூத்துக்குடி ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குவிந்ததால் அப்பகுதியே திருவிழா நடப்பது போல காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, நெல்லை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், குமரிமாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் தலைமையில் மிகப் பெரும் கூட்டமே ராதிகா செல்விக்காகவந்திருந்தது. திமுகவினரின் இந்த தீவிரம் மற்றும் அன்பைப் பார்த்து ராதிகா செல்வி நெகிழ்ந்து விட்டார்.