ரஜினி கட்டளைப்படி ரசிகர்கள் செயல்பட வேண்டும்: சத்யநாராயணா
தஞ்சாவூர்:
ரஜினிகாந்த கட்டளைப்படி ரசிகர்கள் செயல்பட்டு அவருக்கு பெருமை தேடித் தர வேண்டும் என்று அவரது ரசிகர்மன்ற தலைவர் சத்யநாராயணா கூறியுள்ளார்.
பா.ஜ.கவை ஆதரிக்குமாறு ரஜினி சொன்னாலும், அதை பல ரசிகர்கள் ஏற்கவில்லை. செங்கல்பட்டில் பா.ம.க.வேட்பாளர் ஏ.கே. மூர்த்திக்கு ஆதரவாக பல ரசிகர்கள் தேர்தல் வேலை பார்த்து வருகின்றனர். சில இடங்களில்திமுக, காங்கிரசுக்கும் வேலை பார்க்கின்றனர்.
இதனால் எரிச்சலாகியுள்ள சத்யநாராயணா தஞ்சாவூரில் நடந்த ரசிகர் மன்ற கூட்டத்தில் பேசுகையில்,
தனது வாக்கு யாருக்கு என்பதை தலைவர் (ரஜினி) தெளிவாகக் கூறி விட்டார். அவரது கருத்துப்படி ரசிகர்கள்செயல்பட வேண்டும். பாமகவைத் தோற்கடிக்க ஜனநாயக முறையில் செயல்பட்டு தலைவருக்கு பெருமை தேடித்தர வேண்டும்.
ரஜினி ரசிகர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வரதட்சணை வாங்கக் கூடாது.2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது, இறை பக்தியும், நாட்டுப் பற்றும் மிக்கவர்களாக விளங்கவேண்டும்.
தலைவர் ரஜினி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப மீண்டும் படங்களில் நடிக்கத்தொடங்குவார் என்றார் அவர்.