தொண்டரின் லாஜிக்.. அதிகாரி கப்சிப் !
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை தொகுதியில் போட்டியிடும் மோகன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஏராளமான தொண்டர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் சென்ற அவர்ஆட்சித் தலைவர் சந்திரமோகனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அப்போது ஆட்சித் தலைவரின் அறைக்குள் மோகனுடன் வந்த அனைவரும் நுழைய முயன்றதால்அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதைப் பார்த்த அதிகாரி ஒருவர் இத்தனை பேர் வரக் கூடாது,12 பேருக்கு மட்டும்தான் உள்ளே வர அனுமதி உள்ளது என்றார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த ஒரு தொண்டர், அது எப்படி முடியும்? எங்களது கூட்டணியில் 15கட்சிகள் உள்ளன. ஒரு கட்சிக்கு ஒருவர் என்றாலும் கூட குறைந்தது 15 பேராவது வரவேண்டியதிருக்கும் என்று லாஜிக்காக பேச அதிகாரி தலையில் அடித்துக் கொண்டு கப் சிப்ஆனார்.












Click it and Unblock the Notifications