For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் முடிவடைந்தது வேட்பு மனு தாக்கல் !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுபிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

வரும் மே 10ம் தேதி நடக்கவுள்ள வாக்குப் பதிவுக்கு கடந்த 16ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல்தொடங்கியது.

முக்கிய கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்துவிட்டனர். அட்சயதிருதியை நாள் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் 33 பேரும் அதிரடியாக நேற்று, ஒரே நாளில்வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கடைசி நாளான இன்று திமுக வேட்பாளர்களான தஞ்சாவூர் பழனி மாணிக்கம், புதுக்கோட்டைரகுபதி, கரூர் கே.சி.பழனிச்சாமி, கிருஷ்ணகிரியில் சுகவனம் ஆகியோர் வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்தனர்.

மங்களூர் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணேசனும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர்27ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் பார்வையாளர்கள் மாற்றம்:

இந் நிலையில் கோவை தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க இரு அதிகாரிகளைமத்திய தேர்தல் கமிஷன் அதிரடியாக மாற்றியுள்ளது. தமிழக தொகுதிகளில் தேர்தல்பார்வையாளர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை தொகுதிக்கு நியமிக்க இரு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகத்திடம் சில முறையற்றகோரிக்கைகள், வசதிகளை செய்து தரும்படி கேட்டனர். ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட அம்பாசிடர்கார் வேண்டாம் என்று கூறிவிட்டு ஓபல் அஸ்ட்ரா கார் கேட்டார்.

இன்னொரு அதிகாரி தனது குடும்பத்தினர் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல கார் மற்றும் தங்கும்வசதி செய்து தருமாறு கேட்டார்.

இது குறித்து தேர்தல் கமிஷனிடம் கலெக்டர் புகார் தர, இரு அதிகாரிகளையும் கமிஷன்மாற்றியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X