For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியன் வங்கி- தொலைபேசித்துறைக்கு ஆதித்தன் ரூ. 55.73 லட்சம் கடன்பாக்கி

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

நெல்லைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன், இந்தியன் வங்கியில் ரூ.51 லட்சம் கடன் பாக்கி வைத்துள்ளார்.

திருநெல்வேலி தொகுதியிலிருந்து போட்டியிட காங்கிரஸ் சார்பில், தனுஷ்கோடி ஆதித்தனும், வசந்த் குமாரும் கடுமையாகமோதினார்கள். இதனால் அந்தத் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை திணறியது.

தனுஷ்கோடி ஆதித்தனுக்கு வாசனின் ஆதரவு இருந்தது. ஆனால், டெல்லியில் தனது பண பலத்தால் தலைவர்களை வாங்கியவசந்த் குமார், தொகுதியைப் பெற்றுவிட தீவிரமாக முயன்றார்.

கடைசியில் சோனியா காந்தி தலையிட்டு தனுஷ்கோடி ஆதித்தனுக்குத திருநெல்வேலியை ஒதுக்கினார்.

இதனால் கடுப்பானார் வசந்த் குமார். நெல்லையிலும், சென்னையிலும் தனது ஆதரவாளர்களை விட்டு போராட்டம் நடத்தினார்.

இந் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று திடீரென்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்திற்கு ஆதரவாளர்களுடன் வந்த வசந்த் குமார், சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில்தான் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல்செய்துள்ளேன் (!!!). வியாழக்கிழமை மாலைதான் எனக்கு உத்தரவு வந்தது. கட்சி மேலிடம் வாபஸ் பெற உத்தரவிட்டால்மனுவை நிச்சயம் வாபஸ் பெறுவேன் என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X