கலெக்டர்கள், காவல்துறையினர் பாரபட்சம்: கருணாநிதி புகார்
திருச்சி:
ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும், எதிர்க் கட்சியினருக்கு பாதகமாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள்செயல்பட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி புகார் கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருச்சியில் திமுகவினர் கட்டியிருந்த பேனர்களை அதிகாரிகள்அகற்றியுள்ளனர். எதிர்க்கட்சிகள் விஷயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள். இது நல்லதல்ல.
தேர்தல் கமிஷன் விதிமுறைகளில், அதிகாரிகள் அனைத்துத் தரப்பினருக்கும் வருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. அரசு விருந்தினர் விடுதியை எதிர்க் கட்சியினருக்கும் பாரபட்சமின்றி கொடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழநாட்டில் இப்போது அப்படி நடக்கவில்லை.
எனது சுற்றுப்பயணம் முழுவதும் நான் அரசு விருந்தினர் விடுதியில் தங்கவில்லை. சில அதிகாரிகள் பரவாயில்லை, தங்களதுகடமையில் சரியாக உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் தாமதம் காட்டாமல் உடனடியாக செயல்பட வேண்டும்.
தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியினர் வன்முறையில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதை தேர்தல்ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.