சிவகாசியில் கருணாநிதி- வைகோ கூட்டாக பிரச்சாரம்
காஞ்சிபுரம்
வரும் 30ம் தேதி சிவகாசி தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனுக்காககருணாநிதி பிரசாரம் செய்கிறார், பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அவருடன் நானும் கூட்டத்தில் கலந்து கொள்வேன்.
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக மாபெரும் மக்கள் அலை வீசிக் கொண்டுள்ளது. பிரசாரத்திற்கு போகும்இடங்களிலெல்லாம் இதை கண்ணார காண்கிறேன்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும்.
இலங்கையில் மீண்டும் ஒரு தேர்தல் வரும். நாடாளுமன்ற சபாநாயகராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதை அதிபர் சந்திரிகாவால் நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே மீண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும்இன்னொரு தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், அதை விரும்பாத சந்திகாநாடாளுமன்றத்தைக் கலைத்து அமைதி உடன்பாடு ஏற்படுவதை குலைத்து விட்டார் என்றார் வைகோ.