வாஜ்பாயும், 13ம் நம்பரும்!

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை:

பிரதமர் வாஜ்பாய்க்கும், 13ம் எண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் வருகிற மே 13ம் தேதியுடன் அவரதுஅரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது என்று மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, 13ம் எண் ராசியில்லாத எண் என்பது உலகுக்கே தெரிந்தவிஷயம். அந்த விஷயம் தற்போது வாஜ்பாய் விஷயத்தில் உண்மையாகப் போகிறது.

வாஜ்பாய் முதன் முதலாக பிரதமரானபோது 13 நாட்கள்தான் பதவியில் நீடித்தார். அதன் பிறகு மீண்டும் பதவிக்கு வந்தபோது 13மாதங்கள் பதவியில் நீடித்தார். அதன் பின்னர் வாஜ்பாய் ஆட்சியின்போது டெஹல்கா விவகாரம் பெரிதாக வெடித்தது. அதுநடந்தது 2001ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி.

அதன் பின்னர் 2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இப்படி 13ம் எண்ணுக்கும், வாஜ்பாய்க்கும்தொடர்ந்து உறவு உள்ள நிலையில் வருகிற மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அன்றுடன் வாஜ்பாயின் அரசியல்வாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது என்று முடித்தார் அய்யர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+