சென்னை தொகுதிகளில் மிக அதிக வேட்பாளர்கள்!
சென்னை:
சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால்,இங்குள்ள வாக்குச்சாவடிகளில் 3க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்றுடன் கடைசி நாளாகும். நேற்று மாலைமனுக்களை வாபஸ் பெற காலக் கெடு முடிந்தது. இதைத் தொடர்ந்து வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல்வெளியிடப்பட்டது.
இதன்படி தென் சென்னை தொகுதியில்தான் தமிழகத்திலேயே அதிக அளவில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இங்கு மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் பதர்சையத் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
இதேபோல, வட சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் செ.குப்புசாமி, பா.ஜ.க. வேட்பாளர் சுகுமாறன்நம்பியார் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், அதிமுக வேட்பாளர் பாலகங்கா ஆகியோர் உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதனால் இந்தத் தொகுதிகளில் 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். ஒரு மின்னணுஇயந்திரத்தில் 16 பெயர்கள் வரை அதிகபட்சம் இடம் பெற முடியும். எனவே தென் சென்னையில் 3 இயந்திரங்கள்தேவைப்படுகிறது. மற்ற 2 தொகுதிகளிலும் 2 இயந்திரங்கள் வரை தேவைப்படும்.
3 மின்னணு இயந்திரம் வைக்கப்பட உள்ளதால், ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்களிக்க கூடுதல் நேரம்தேவைப்படும். எனவே தென் சென்னை தொகுதியில் மட்டும் கூடுதல் நேரம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்குகோரிக்கை விடுக்க தொகுதிக்கான தேர்தல் அதிகாரி விஜயக்குமார் முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications