வன்முறையைத் தூண்ட ரஜினி முயற்சி: பா.ம.க.
சென்னை:
பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் தனது ரசிகர்கள் மூலம் வன்முறைக்கு ரஜினி தூபம்போட்டிக் கொண்டிருப்பதாக அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி குற்றம் சாட்டியுள்ளார்.
தனது ரசிகர்களைத் தாக்க பா.ம.க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் கமிஷனிடம் ரஜினி புகார்கொடுத்ததையடுத்து அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
பா.ம.கவை களங்கப்படுத்தும் முயற்சியில் தோற்றுப் போன சக்திகள் விட்டுச் சென்ற இடத்திலிருந்துஇப்போது புதிதாக சிலர் புறப்பட்டுள்ளார்கள். அவர்களில் நண்பர் ரஜினிகாந்தும் ஒருவர்.
பாபா படம் தோற்றதற்கும் பா.ம.கவுக்கும் என்ன சம்பந்தம்? அதற்கும் தேர்தலுக்கு என்னசம்பந்தம்? இதையெல்லாம் மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
டெல்லியில் மூன்று நாட்கள் தங்கி இருந்து அபாயின்மென்ட் கேட்டு, தலைமைத் தேர்தல்ஆணையரை அவர் சந்தித்து எங்களுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். 67 கோடி பேர்வாக்களிக்கும் மாபெரும் தேர்தலை நடத்தும் பொறுப்பில் உள்ள தேர்தல் ஆணையர் 5 நிமிடம்நேரம் ஒதுக்கி ரஜினியை சந்தித்திருக்கிறார் என்பதைத் தவிர அவர் தந்த புகாரில் எந்த சத்தும்இல்லை.
பா.ம.க. மீது வன்முறை புகார்களை கற்பனையாக, ஆதாரம் இல்லாமல் அடுக்கியுள்ளார்.வன்முறைக்கு தூபம் போடுபவர்கள் யார்? தூண்டி விடுபவர்கள் யார்? இவர்களது கடந்த காலவரலாறு என்ன?
காவிரி தண்ணீருக்கு நெய்வேலியில் போராட்டம் நடத்தினால் கர்நாடகத்தில் தமிழர்களை சும்மாவிடுவார்களா என்று குதர்க்கம் பேசியது அகிம்சையா? தமிழக திரையுலகம் ஒற்றுமையாகபோராட்டம் நடத்திவிடாமல் தடுத்து, தமிழகத்தில் ஒற்றுமையை குலைத்தது யார்?
புது வேடம் போட்டு தமிழகத்தின் ஆறரை கோடி மக்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது.
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ராமதாசுக்கு எதிராக ஆபாச, அருவறுப்பு போஸ்டர்களை ஒட்டியதுயாருடைய ரசிகர்கள்? அதைத் தூண்டுவிட்டது யார்? அதைக் கண்டுகொள்ளாமலும்கண்டிக்காமலும் இருந்த அகிம்சாவதி யார்?
தேர்தல் விதிகளுக்கு மாறாக மதுரையில் கறுப்புக் கொடி காட்டியது யார்? கொடி காட்டகட்டளையிட்டது யார்? இதை தமிழ் உணர்வு மிக்க தமிழக மக்கள் உணர்வார்கள்.
வன்முறைக்கு மறைமுகமாக தூபம் போட்டுக் கொண்டிருப்பவர்களே, பா.ம.க போட்டியிடும்தொகுதிகளில் வெளியாட்களைக் கொண்டு வந்து பா.ம.கவின் வெற்றியைத் தடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர்களே, பா.ம.க மீது வீண் பழி சுமத்துவது வேடிக்கையாக இருக்கிறது.
மக்கள் ஆதரவு கொண்ட பா.ம.கவின் யாராலும் தடுத்திட முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.