தமிழகத்தில் 52 வேட்பு மனுக்கள் வாபஸ்: களத்தில் 568 வேட்பாளர்கள்
சென்னை:
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 568 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 391பேர் சுயேச்சைகள். பாண்டிச்சேரியில் 15 சுயேட்சைகள் உட்பட 21 பேர் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 746 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
கடந்த 23-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, 127 பேரின் மனுக்கள்நிராகரிக்கப்பட்டன. 619 பேரின் மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டன.
வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று 51 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.இதையடுத்து மொத்தம் 568 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 391 சுயேச்சைகள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
புதுவை தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து அங்கு 15சுயேட்சைகள் உட்பட 21 பேர் களத்தில் உள்ளனர்.
மங்களூர் தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் மொத்தம் 10 பேர் போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications