For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ: பொடா வழக்கு விசாரணைக்கு 3 நாள் தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 நாள் தடைவிதித்துள்ளது.

வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், தன் மீதான பொடா வழக்கைமறு ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி வாபஸ் பெற தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தான்தாக்கல் செய்துள்ள இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, பொடா வழக்கு விசாரணையை நிறுத்திவைக்குமாறு பொடா நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ரவிராஜ பாண்டியன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல்என்.ஆர்.சந்திரன் ஆஜராகி, வருகிற 29ம் தேதி (வியாழக்கிழமை) வரை இந்த வழக்கு விசாரணை நடத்தமாட்டோம் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து 29ம் தேதி வரை பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு நீதிபதி தடை விதித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X