துப்பாக்கிகளுடன் களம் இறங்கும் காங்கிரஸார்!
சென்னை:
ஏ.கே.47 துப்பாக்கிளுடன் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர் தமிழக காங்கிரஸார். பயப்பட வேண்டாம், இவை வெறும்பொம்மை துப்பாக்கிகள்தான்.
ஏ.கே.47 துப்பாக்கிகளை இந்திய ராணுவத்திற்கு வாங்கியதில் உள்துறை அமைச்சகம் பெருமளவில் ஊழல்புரிந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது. போபர்ஸ் ஊழலை பெரிதாக்கும் பா.ஜ.கவுக்கு பதிலடிகொடுக்க ஏ.கே.47 ஊழலை பெரிதாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து ஏ.கே.47 துப்பாக்கிகளைப் போன்ற பொம்மைத் துப்பாக்கிகளை அனைத்து மாநில காங்கிரஸ் கட்சிதலைமையகத்திற்கும் காங்கிரஸ் மேலிடம் அனுப்பியுள்ளது. பிரசாரக் கூட்டங்களில் இந்த பொம்மைத்துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு பிரசாரம் செய்யுமாறு கட்சியினருக்கு மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்ற பொம்மைத் துப்பாக்கிகள், சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமானசத்தியமூர்த்தி பவனுக்கும் வந்துள்ளது. இனிமேல் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பிரசாரத்தின்போது கையில்துப்பாக்கியைக் காணலாம்.
"குரல்" கொடுக்கும் இளையராஜா:
காமராஜ் படத்திற்காக இளையராஜா இசையமைத்துப் பாடிய, நாடு பார்த்ததுண்டா என்ற பாடல் இப்போதுகாங்கிரஸ் கட்சியின் பிரசாரப் பாடலாகி விட்டது.
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் காமராஜ் என்ற பெயரில் சமீபத்தில் திரைப்படம்வெளியானது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அவரே எழுதி, நாடு பார்த்ததுண்டா என்றபாடலைப் பாடியிருந்தார்.
இந்தப் பாட்டை இப்போது காங்கிரஸார் தங்களது பிரசாரத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில்திருச்சியில் ஜி.கே.வாசன் கலந்து கொண்ட பிரசாரத்தின்போது நாடு பார்த்ததுண்டா பாடல் எங்கு பார்த்தாலும்ஒலித்துக் கொண்டிருந்தது.
இப்படிச் செய்யலாமா என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, எம்ஜிஆர் படப் பாடல்களை அதிமுகவினர்பயன்படுத்தும்போது நாங்கள் செய்வதில் தப்பில்லையே என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications