ஜெயலலிதா வேன் மீது கல் வீச்சு; புதிய தமிழகம் தொண்டர் கைது
திருநெல்வேலி:
தென்காசி தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பகுதியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது, அவரது பிரசார வேன் மீது கல் ஒன்று விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். வாசுதேவநல்லூர் பகுதியில்வேனுக்குள் அமர்ந்தவாறே அவர் பிரசாரம் செய்தார். அப்போது கல் ஒன்று வேன் மீது வந்து விழுந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பதட்டப்படாத ஜெயலலிதா, விஷமிகளின் தூண்டுதலின் பேரில்சில ரெளடிகள்தான் இதுபோல கல் வீசியுள்ளனர். இதைக் கண்டு நான் பயப்பட மாட்டேன்.
அவர்களுக்கு நீங்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். செய்வீர்களா? என்று பேசிய ஜெயலலிதா பின்னர்பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
ஜெயலலிதாவின் வேன் மீது யார் கல் வீசியது என்பது குறித்து போலீஸார் விசாரித்த போலீஸார் புதிய தமிழகம்கட்சித் தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:-
திமுக தலைவர் கருணாநிதி ஒரு மெகா பொய் சொல்லி இருக்கிறார். மெகா கூட்டணி என்பதால் மெகா பொய்சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு பெரிய கொள்கை கூட்டணி இதுவரை அமைந்தது இல்லைஎன்று கூறியுள்ளார்.
அவரே அண்ணா காலத்தில் இப்படி ஒரு கூட்டணி உருவாயிற்று. ராஜாஜி, கம்யூனிஸ்டு ராமமூர்த்தி இருந்தார்கள்.அதன்பிறகு இப்போதுதான் பெரிய கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து ஆளுகிறவர்களுக்கு அச்சம்,பொறாமை என்கிறார்.
முதலில் இப்படி கூட்டணி ஏற்படவில்லை என்கிறார். பிறகு அண்ணா காலத்தில் இருந்தது என்கிறார். இதுவே ஒருமுரண்பாடு. மேலும் கருணாநிதி ஒரு மகத்தான உண்மையை மறைத்து விட்டார். அன்றைய கூட்டணி ஆட்சியில்இருந்த காங்கிரஸ் கட்சியை நொறுக்க உருவாக்கப்பட்டது.
இப்போது ஏற்பட்டுள்ள கூட்டணி செத்துப்போன காங்கிரசுக்கு, ஒப்பனை செய்து ஆட்சிப் பீடத்தில் உட்காரவைப்பதற்கான கூட்டணி. எப்படி இரண்டும் சமமாகும்?
ஆளுகிறவர்களுக்கு அச்சம், பொறாமை என்கிறார். யாரைப் பார்த்து யார் அச்சப்படுவது? அச்சம் என்பது என்அகராதியில் இல்லை. சிங்கம் தனியாகவே எந்த பகையையும் சந்திக்கும். குள்ள நரிகள்தான் கூட்டணிஅமைத்துக்கொண்டு வேட்டைக்கு செல்லும் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications