வாக்காளர் பட்டியல் குளறுபடி: மேலும் 2 சென்னை அதிகாரிகள் மீது நடவடிக்கை
சென்னை:
வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக மேலும் 2 சென்னை அதிகாரிகள் மீது தேர்தல்ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், இன்னொரு அதிகாரிகட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளார்.
சென்னை வாக்காளர் பட்டியலில் பெருமளவு குளறுபடிகள் நடந்துள்ளது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணுசாமியை இடமாற்றம் செய்தது தேர்தல் ஆணையம். இந் நிலையில் தற்போது மேலும் 2அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட சென்னை தொகுதிக்குட்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபைத் தொகுதி வாக்காளர் பட்டியலைதயாரிக்கும் பொறுப்பில் இருந்த சம்பத் (தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி), நாம்தேவ் (உதவி வருவாய்அதிகாரி) ஆகியோர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்களில் சம்பத் நீண்ட விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளார். நாம்தேவ் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலின்போது சைதை மண்டல அதிகாரியாக இருந்தார் சம்பத். அப்போதும்இதேபோல வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
இந்த இரு அதிகாரிகளும் அதிமுகவினருக்கு துணை போனதோடு, திமுகவுக்கு அதிக வாக்குகள் விழும் பகுதிகளில்பல வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில இருந்து நீக்கியுள்ளனர்.