விரல் வெட்டி ஏட்டையா சஸ்பெண்ட்
சேலம்:
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கைவிரலை வெட்டிக் கொண்டஏட்டையா ரத்தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவின் தீவிர தொண்டர் ரத்தினம். சேலம் மாவட்டம் காப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகபணியாற்றி வந்தார். அதிமுகவுக்கு வரும் நடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தனதுகைவிரல்களைத் துண்டித்துக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு அதிமுக சார்பில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை கொடுக்கஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந் நிலையில் தலைமைக் காவலர் ரத்தினம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரத்தினத்தைப் போலஏராளமான காவலர்கள் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு திமுகஉள்ளிட்ட கட்சிகள் புகார் அனுப்பின.
இந் நிலையில் தலைமைக் காவலர் ரத்தினத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications