For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவிடம் மனு கொடுக்க முடியாததால் கணவன், மனைவி தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

ராஜபாளையம்:

முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க முயன்று, முடியாமல் போனதால், மனம் உடைந்த கணவனும்,மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர்.

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 31). இவரது மனைவிகனகலட்சுமி (29). செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா ராஜபாளையம் பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவரிடம் உதவி கோரி மனு கொடுக்க முருகனும், கனகலட்சுமியும் நாச்சியாபுரம் சந்திப்பில்காத்திருந்தனர். ஆனால் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையினர் அவரது வேன் அருகே முருகன் தம்பதியைநெருங்க விடாமல் தடுத்து விட்டதால், அவர்களால் மனுவைக் கொடுக்க முடியவில்லை.

இதனால் மனமுடைந்த இருவரும் வீடு திரும்பினர். அங்கு இருவரும் விஷம் குடித்தனர். பின்னர் முருகன் வீட்டைவிட்டு வெளியேறி ராஜபாளையம் செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ்சுக்குள் மயங்கி விழுந்த அவரை பயணிகள்அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அதற்குள் அவர் இறந்து விட்டார். அதே போல முருகனின் மனைவி கனகலட்சுமியும் வீட்டில் இறந்தார்.இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X