கேள்வித் தாள்கள் லீக்: மதுரை பல்கலைக்கு ரூ. 1.5 லட்சம் நஷ்டம் !
மதுரை:
கேள்வித்தாள்கள் லீக் ஆகியதால், புதியத் தேர்வுத் தாள்கள் தயாரிப்பு, தேர்வுத் தேதிகள் மாற்றம் ஆகியவற்றால்மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 1.5 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக துணைவேந்தர்பி.கே.பொன்னுசாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைந்வேந்தர், கேள்வித் தாள் லீக் ஆகியுள்ளதால்பல்கலைக்கழகத்தின் 42 செமஸ்டர் தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை தொடங்கி மே 7ம் தேதி வரை திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறவுள்ளன.
மொத்தம் 42 தேர்வுத் தாள்கள் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 1.5 லட்சம்அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, பெரியகுளத்தில் உள்ள ஜெயராஜ் செல்லத்துரை நாடார் கல்லூரியில் இருந்துதான் கேள்வித்தாள்கள் லீக் ஆனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கல்லூரியின் முதல்வர் வெங்கடேசனைமதுரைக்கு அழைத்து அவரிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னுசாமி நேரடியாக விசாரணைநடத்தியுள்ளார்.