ரஜினி ஒரு பலூன்..: கி.வீரமணி விமர்சனம்
தர்மபுரி:
ரஜினி ஒரு பலூன், அதை ஊதி, ஊதியே உடைக்கப் போகிறார்கள் என்று தி.க. தலைவர் கி. வீரமணிகூறினார்.
தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் செந்திலை ஆதரிதது வீரமணி பேசியதாவது:
இந்தியாவை காங்கிரஸ் 50 வருடம் ஆண்டுவிட்டதால், பா.ஜ.கவும் ஒரு 10 வருடம் ஆளட்டுமேஎன சிலர் நினைக்கலாம். ஜனநாயகத்தில் மாற்றுக் கட்சித் தேவை தான். ஆனால், பாரதீய ஜனதாமாற்றுக் கட்சியல்ல, ஏமாற்றுக் கட்சி.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு தரும் மண்டல் கமிஷன்பரிந்துரையை அமலாக்கியதற்காக வி.பி.சிங்கின் அரசைக் கவிழ்த்த முற்பட்ட ஜாதி வெறியர்கள்தான் பா.ஜ.கவினர்.
1999ம் ஆண்டில் மத்திய அரசை விட்டு வெளியேறிய ஜெயலலிதாவும், இப்போது வெளியேறியகருணாநிதியும் தங்களை பா.ஜ.க. ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளனர். எல்லோரையும்ஏமாற்றுபவர்கள் பா.ஜ.கவினர்.
இங்கே சில பிரகஸ்பதிகள் (ரஜினி) வன்முறை இல்லாத கட்சி என்று சொல்லி பா.ஜ.கவுக்கு ஆதரவுதேடுகிறார்கள். அவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அந்த பலூன் (ரஜினியின் பலம்)ரொம்பப் பெரியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது குண்டூசி குத்தி ஒன்னும்இல்லாமல் ஆகப் போகிறது.
சில நேரங்களில் பலூன் வெடிக்க குண்டூசி கூட தேவையில்லை. அதை ஊதி, ஊதியேபெரிதாக்கியே வெடித்துவிடலாம். அப்படித்தான் இங்கே ஒரு பலூன் (ரஜினி) மேலும் மேலும்ஊதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications