அவரா இவரு?
மதுரை:
மதுரையில் திமுக கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் சந்திரசேகருக்கு வித்தியாசமானபிரச்சனை ஏற்பட்டது.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகனை ஆதரித்துப் பேச வந்தார் சந்திரசேகர்.மண்டையில் முடியெல்லாம் உதிர்ந்துவிட்ட நிலையில், ஆளே அடையாளம் மாறிப் போயிருந்தார்.
நேதாஜி சாலையில் பிரச்சாரம் செய்ய அவரை திமுகவினர் அழைத்து வந்தனர். இதோ உங்கள்மத்தியில் சந்திரசேகர் பேசப் போகிறார் என்று திமுகவினர் கூற, பேச ஆரம்பித்தார் சந்திரசேகர்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, பொது மக்களில் சிலர் இடைமறித்தனர். யோவ் நீ நிறுத்துய்யா..சந்திரசேகரை பேசச் சொல்லு என சவுண்டு விட்டனர்.
இதையடுத்து சந்திரசேகரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிய உடன்பிறப்பு ஒருவர், வாக்காளப்பெருங்குடி மக்களே, இப்போது உங்கள் முன் பேசிக் கொண்டிருப்பவர் தான் சந்திரசேகர் என்றுஅடையாளம் காட்டினார்.
அதன் பின்னர் தான் கூட்டத்தில் அமைதி திரும்பியது.












Click it and Unblock the Notifications