உளறல் சந்திரனும் ரத்தத்தின் ரத்தங்களும்

Subscribe to Oneindia Tamil

பவானி:

திமுகவின் கள்ள ஓட்டு கம்பெனிக்கு தலைவனாக இருந்தவன் நான் என்று எஸ்.எஸ். சந்திரன்கூறினார்.

கோபிச்செட்டிப்பாளையம் அதிமுக வேட்பாளர் கோவிந்தராஜனை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.பியான எஸ்.எஸ். சந்திரன் வாய்க்கு வந்தபடி உளறினார்.

அவரது பேச்சு விவரம்:

பவானி மக்களிடம் இரண்டே கேள்வி கேட்கிறேன். இந்தியாவை இந்தியர் ஆள வேண்டுமா?வேண்டாமா?.

வேண்டும் என்றால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள். வேண்டாம் என்றால் யாருக்குவேண்டுமானாலும் வாக்களியுங்கள்.

கருணாநிதிக்கு ஏற்கனவே ஒற்றைக் கண் சிவராஜன் என்று பெயர் சூட்டியிருக்கிறேன். இப்போதுஅவருக்கு புள்ளிராஜா என்ற பெயரையும் சூட்டுகிறேன்.

திமுகவில் நான் இருந்தபோது அவருக்கு பல விஷங்களில் நான் தான் டூப்பாகசெயல்பட்டிருக்கிறேன். அவரது கள்ள ஓட்டு கம்பெனிக்கு நான்தான் மூளையாக இருந்துசெயல்பட்டேன்.

முதல்வர் ஜெயலலிதாவை லாரியை விட்டு மோதி கொல்ல முயற்சி நடந்தபோது லாரியைவாடகைக்குப் பிடிக்கச் சென்றது ஆற்காடு வீராசாமி. துணைக்குப் போனது நான் என்றார்எஸ்.எஸ்.சந்திரன்.

கருணாநிதியை எஸ்.எஸ். சந்திரன் திட்டியபோது கை தட்டிய ரத்தத்தின் ரத்தங்கள், பின்னர் தன்னைத்தானே அவர் தாழ்த்திப் பேசியபோது மேலும் பலமாக கரகோஷம் எழுப்பியது தான் கூட்டத்தின்ஹை-லைட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+