அமெரிக்க இமிக்ரேசன் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்கா செல்வதற்கான விண்ணப்பக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் இமிக்ரேஷன் அலுவலக செய்தித் தொடர்பாளர் கிறிஸ்பென்ட்லே கூறியதாவது:
குடியுரிமை, இமிக்ரேசன் பணிகளால் அமெரிக்காவுக்கு நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுவருகிறது. இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் விண்ணப்பக் கட்டணங்களை உயர்த்த கடந்த ஜனவரி மாதம்அரசு முடிவெடுத்தது. இன்று முதல் இது அமலுக்கு வருகிறது என்றார்.
புதிய கட்டண விகிதப்படி, அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் 260 டாலரிலிருந்து 320 டாலராகஉயர்த்தப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் 255 டாலரிலிருந்து 315 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
குடியுரிமை பெற்றவர் தனது மனைவியை அழைத்து வருவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் 115 டாலரிலிருந்து165 டாலராக உயர்ந்துள்ளது. நிரந்தர குடியுரிமை அட்டையை புதுப்பிப்பதற்கான கட்டணம் 130 டாலரிலிருந்து185 டாலராக உயர்ந்துள்ளது.
இது தவிர கைரேகை பதிவுக் கட்டணம் 50 டாலரிலிருந்து 70 டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்கக் குடியுரிமை அலுவலகத்தின் மோசமான நிர்வாகத்தால், லட்சணக்கானோர் விண்ணப்பம் செய்துவிட்டுகாத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாகத்தை மேம்படுத்தாமல், கட்டணங்களை மட்டும் உயர்த்தியிருப்பதுகுடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் சிரமத்தை மேலும் அதிகப்படுத்தும் என கட்டண எதிர்ப்பாளர்கள்கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications