மே 10ல் பாலசிங்கம்- நார்வே அமைச்சர் சந்திப்பு
சென்னை:
இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்ற அந் நாட்டின் கோரிக்கை குறித்து பேசிவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய சின்ஹா,
அமைதி முயற்சிகளில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என சமீபத்தில் டெல்லி வந்த இலங்கைவெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நேரடியாகவே கோரிக்கை விடுத்தார்.
இந்தியா எந்த மாதிரியான பங்காற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள் என அவரிடம் கேட்டுள்ளேன். தனதுஅரசுடன் கலந்து பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறியிருக்கிறார் கதிர்காமர்.
கதிர்காமர் தனது பதிலைத் தந்த பின்னர் அமைதி முயற்சிகளில் பங்கேற்பது குறித்து இந்தியா முடிவு செய்யும்.
இலங்கை இறையாண்மை பாதிக்கப்படாமல் இந்த இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என இந்தியாவிரும்புகிறது. பிரச்சனைக்குத் தீர்வு அந் நாட்டின் சக்திகளிடம் (அரசு, விடுதலைப் புலிகள்) இருந்து தான் வரவேண்டும். யாரும் தீர்வை அவர்கள் மீது திணிக்க முடியாது.
ராஜிவ் கொலை வழக்கில் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பல முறை இலங்கையிடம்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைதி திரும்பி பின்னர் தான் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே பாலம்அமைப்பது, தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து ஆகியவை குறித்து யோசிக்க முடியும் என்றார்சின்ஹா.
புலிகளுடன் நார்வே தூதர் சந்திப்பு:
இதற்கிடையே வன்னிக்குப் பயணித்த நார்வே அமைதிக் குழுவின் சிறப்பு ஆலோசகரான எரிக் சோல்ஹைம் உள்ளிட்டோர் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப்பேசினர்.
ரணில் அரசு நீக்கப்பட்டு சந்திரிகாவின் கட்சி அரசு பதவியேற்ற பின் புலிகளை நார்வே தூதர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இச் சந்திப்புக்குப் பின் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழர் பகுதிகளில் சுயாட்சி அதிகாரம் கொண்ட இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியின் கீழ் மீண்டும் பேச்சுவார்த்தையைத்தொடங்க புலிகள் தயாராக உள்ளனர். எப்போது இலங்கை அரசு தயாரோ அப்போதே நாங்களும் பேச்சுவார்த்தைக்குத் தயார்.
அமைதி முயற்சிகளில் நார்வே தொடர்ந்து முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதே எங்கள் நிலை.
கருணாவுக்கு உதவி செய்வதை இலங்கை ராணுவம் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான பின் விளைவுகள் ஏற்படும் என்றார் தமிழ்ச்செல்வன்.
நார்வேக்கு புத்த பிட்சுகள் எதிர்ப்பு:
இந் நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவையும் ஈடுபடுத்த வேண்டும் என்றும், நார்வே அமைதிக்குழுவினரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் புத்த பிட்சுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய பராபம்பரிய கட்சியைச் சேர்ந்த புத்த பிட்சு எம்.பிக்கள் 9 பேர் இக் கோரிக்கையை வைத்துள்ளனர். நார்வேபுலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டினர்.