திருவள்ளூர் கலெக்டரை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு
டெல்லி:
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகனை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவுபிறப்பித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள், அதிகாரிகள் மட்டத்தில் குளறுபடிகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான்.ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முறைகேடுகள், குளறுபடிகள் செய்த பல அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுத்து வருகிறது தேர்தல் ஆணையம்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணுசாமி, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார்ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டனர். மேலும் தாசில்தார்கள் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந் நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகனை மாற்றம் செய்து தலைமை தேர்தல்ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில், துணை தேர்தல் ஆணையர் ஏ.என்.ஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக பல்வேறு குளறுபடிகள்நடந்துள்ளதாக புகார்கள் வந்தன. இது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தபோது குளறுபடிகள் நடந்ததுஉறுதியானது.
இதையடுத்து சந்திரமோகனை இடமாற்றம் செய்ய உத்தரவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
இது போலவே மதுரை, ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களும் அதிமுகவுக்குஆதரவாக செயல்பட்டு வருவதாக புகார்கள் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications