கல்யாணத்திற்கு முதல் நாள் தந்தையை கொன்ற மகன்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூரில் கல்யாணம் நடக்கவிருந்த சூழ்நிலையில், தந்தையின் செயலால் கோபமடைந்த மகன் அவரைக் கொன்றுவிட்டு சிறைக்குப் போனார், கல்யாணம் நின்று போனது.

வேலூரை அடுத்துள்ள பெரியபாளையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. ராணுவத்தில் சலவைத்தொழிலாளராக இருந்து வருகிறார். இவரது மகன் பாலாஜி. இவருக்கு திங்கள்கிழமை திருமணம் நடப்பதாகஇருந்தது.

திருமணத்திற்காக துரைசாமி விடுப்பில் வந்திருந்தார். கல்யாணத்துக்கு முதல் நாள் மாலை திருமண மண்டபத்தில்அனைவரும் கூடியிருந்தனர். இந் நிலையில் துரைசாமி குடித்து விட்டு மண்டபத்திற்கு வந்தார். பின்னர்சமையலறையில் தயார் செய்து கொண்டிருந்த லட்டுக்களை எடுத்துச் சாப்பிட்டார். பிறகு, லட்டுக்கள்வைக்கப்பட்டிருந்த தட்டின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இதைப் பார்த்து கோபமடைந்தார் பாலாஜி. தந்தையின் சிறுபிள்ளைத்தனமான செயல் அவருக்கு பெரும்ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வேகமாக வந்து தந்தையை பிடித்து இழுத்துச் சென்று மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்.

பலத்த அடிபட்ட துரைசாமியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு துரைசாமிஇறந்தார். இதையடுத்து போலீஸார் பாலாஜியைக் கைது செய்தனர். இதனால் காலையில் நடப்பதாக இருந்ததிருமணம் நடக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+