மூடப்பட்ட பெரியார் சிலையை திறக்க அரசுக்கு கருணாநிதி கெடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதுக்கோட்டையில் தமிழக அரசால் மூடி, சீல் வைக்கப்பட்ட பெரியார் சிலை வரும் 10ம் தேதிக்குள்திறக்கப்படாவிட்டால், போராட்டத்தில் குதிக்கப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை திராவிடர் கழக அலுவலக வளாகத்தில் பெரியார் அறக்கட்டளையின் சார்பில் பெரியார் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 7ம் தேதி திறக்கப்பட இருந்தது.

இந் நிலையில் சிலைக்கு அரசிடம் அனுமதி பெறப்படவில்லை என்று கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரெனசிலையை மூடி, சீல் வைத்தனர்.

இந் நிலையில் முரசொலியில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடத்தில் தான் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.வரும் 10ம் தேதிக்குள் அந்த சீல், அதே அதிகாரிகளால் அகற்றப்படாவிட்டால் அடுத்த நாள் திராவிடஇயக்கத்தினர் ஒன்று கூடிப் பேசுவோம்.

பெரியார் எங்களுக்கு ஊட்டிய சுயமரியாதை எத்தகையது என்பதை வெளிப்படுத்தும் வகையில் நடவடிக்கையில்இறங்குவோம். திராவிடர் கழகத் தலைவர் வீரமணியிடம் இது குறித்துப் பேசுவேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

சிலைக்கு சீல் வைக்கப்பட்டதையடுத்து அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+