ஜெயலலிதாவை வாட்டுகிறது தேர்தல் ஜுரம்: வாசன்
மயிலாடுதுறை:
அதிமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் வாசன் கூறினார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர அய்யருக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் வாசன்பேசியதாவது:
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக மிக வலிமையான கூட்டணியை அமைய காரணமாகஇருந்தவர் கருணாநிதி தான். சோனியாவுடன் ஒரே ஒரு தொலைபேசிப் பேச்சு மூலம் மாபெரும்கூட்டணியை அமைத்துக் காட்டினார்.
கூட்டணியில் உள்ள கட்சிகளின் பலத்தைப் பார்த்தும், மக்கள் நமக்குத் தந்து வரும் ஆதரவைப்பார்த்தும் அதிமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. இதனால் தான் வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சியினரை வசை பாடி வருகிறார் ஜெயலலிதா.
பா.ஜ.க. அரசு மட்டுமல்ல, ஜெயலலிதா அரசும் மாற்றப்பட வேண்டிய ஒன்று தான். முதலில் மே 10ம்தேதி வாஜ்பாய் அரசை அகறறுவோம். அதன் பின்னர் தமிழகத்திலும் நிச்சயம் மாற்றம் வரும்.
மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்து வைத்துக் கொண்டுள்ள ஜெயலலிதா, என்னசெய்தாவும், எவ்வளவு பணத்தை அள்ளிக் கொட்டினாலும் வெற்றி பெற முடியாது.
தனது சாதனை என்று ஏதாவது ஒன்றைச் சொல்லி ஜெயலலிதா ஓட்டு கேட்கட்டும், பார்க்கலாம்.வாஜ்பாய் முகமூடியைப் போட்டுக் கொண்டு ஓட்டு கேட்கிறார். முகமூடிகளை கிழித்து எறிவோம்.
சோனியாவை வெளிநாட்டவர் என்கிறார்கள். இந்தியாவுக்காக தனது கணவரை இழந்த,இந்தியராகவே வாழும் ஒரு பெண் அவர். இதை எத்தனை முறை சொன்னாலும் ஜெயலலிதாவுக்குஉறைக்காவிட்டால் நாம் என்ன செய்ய முடியும்? என்றார் வாசன்.