இன்று வெங்கைய்யா.. நாளை அத்வானி தமிழகத்தில் பிரசாரம்
சென்னை:
அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்று வடசென்னை தொகுதியில் பிரசாரம் செய்கிறார். கனமழை காரணமாக இன்று ஊட்டியில் துணைப் பிரதமர் அத்வானியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டு.
இத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுகுமாரன் நம்பியாரை ஆதரித்து வில்லிவாக்கம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.
அதே போல அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல. கணேசன் இன்று வட சென்னையிலும் நாளை சிதம்பரம்,புதுவைத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார்.
அத்வானி வருகை:
இந் நிலையில் துணைப் பிரதமர் அத்வானி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை தமிழகம் வருகிறார். விருத்தாசலத்தில்நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
முதலில் எல்.கே. அத்வானி இன்று ஊட்டியில் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகபெய்த மழையின் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரதுஊட்டி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதனால் நாளை பகல் 12 மணிக்கு அவர் விருத்தாசலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்டு பேசும் அத்வானி, பின்னர் புதுவைக்குச் சென்று பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்துக்குபிரசாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications