கட்டை விழுந்து சாய்பாபாவுக்கு எலும்பு முறிவு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய் பாபா மீது மரக்கட்டை விழுந்ததில் அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது.
சாய்பாபாவின் பிருந்தாவன் ஆசிரமம் பெங்களூர் காடுகோடி பகுதியில் உள்ளது. கோடையில் சாய்பாபா இங்குதங்கியிருந்து பக்தர்களை சந்திப்பது வழக்கம். கடந்த மாதம் பெங்களூர் வந்த அவர் ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.
இந் நிலையில் ஆசிரமத்தினுள்ளே நடந்து சென்றபோது, திரைச்சீலை தொங்கவிடப்பட்டிருந்த மரக்கட்டைசாய்பாபாவின் கை மீது விழுந்தது. இதில் அவரது கை எலும்பு முறிந்தது.
அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சாய்பாபா நலமுடன் இருப்பதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications