வாக்குப்பதிவு: 3 நாட்களுக்கு மூடப்படும் டாஸ்மாக் கடைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மே 10ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதால், டாஸ்மாக் மதுக் கடைகள்அனைத்தும் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 10ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம்தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளன.
இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி மே 8ம் தேதி மாலை 5 மணியிலிருந்து மே 10ம் தேதி மாலை 5 மணி வரையிலும் கடைகள்மூடப்பட்டிருக்கும். அதேபோல வாக்குகள் எண்ணப்படும் மே 13ம் தேதியும் கடைகள் மூடப்பட்டிருக்கும்.












Click it and Unblock the Notifications