தேர்தல் பணியில் தனியார் கல்லூரி ஊழியர்கள் ஈடுபட தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் பள்ளி, கல்லூரி ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தேர்தல் பணிகளில் தனியார் பள்ளி, கல்லூரி ஊழியர்களையும் ஈடுபடுத்துவது தொடர்பாக மாநில தலைமைதேர்தல் அதிகாரி சாரங்கி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த யாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்று தேர்தல்அதிகாரிகளுக்கு கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. நாளை காலைமுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட விநியோக மையத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications