தேர்தல் அதிகாரிகள் போர்வையில் அதிமுகவினர்: திமுக புகார்
சென்னை:
அரசு அதிகாரிகள் போல போலியாக நடித்து தேர்தல் பணிகளில் அதிமுகவினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகதேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு திமுக ஒருங்கிணைப்புச் செயலாளர்டி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பியுள்ள புகாரில், அரசு ஊழியர்கள் என்று கூறி சில அதிமுகவினரும், அவர்களதுகுடும்பத்தினரும், தேர்தல் பணியாற்றுவதற்கான உத்தரவுகளைப் பெற்றுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள உண்மையான அரசு ஊழியர்களுக்குப் பதில் இந்த போலிஅரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானஅதிமுகவினர் இதுபோல போலி தேர்தல் அரசு ஊழியர்களாகவும், தேர்தல் அதிகாரிகளாகவும் ஊடுறுவியுள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில்கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்களுக்குரிய பயிற்சி வகுப்புகள்முடிந்த நிலையிலும், இன்னும் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.
ஊழியர் சங்கம் புகார்:
இந் நிலையில் தமிழகத்தில் 13 நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தி அனுபவப்பட்ட மாநில அரசு ஊழியர்களைஇந்த முறை தேர்தல் ஆணையம் சரிவரப் பயன்படுத்தாமல் புறக்கணிப்பதாக தமிழக அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சங்கத் தலைவர் ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் முத்துசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், கடந்த 13 நாடாளுமன்றத் தேர்தல்களை திறம்பட நடத்திய அனுபவம் மிக்கவர்கள் தமிழகஅரசு ஊழியர்கள். ஆனால் இந்த முறை அவர்களை தேர்தல் ஆணையம் சரிவரப் பயன்படுத்தாமல், பலஇடங்களில் மத்திய அரசு ஊழியர்களை நியமித்துள்ளது.
மேலும், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட மாநில அரசு ஊழியர்கள் பெரும்பாலானோருக்கு இன்னும் பணிநியமன உத்தரவுகளை வழங்காமல் தேர்தல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகிறார்கள். இதுதவிர தபால்ஓட்டுக்களை அரசு ஊழியர்கள் பெறுவதிலும் இழுபறி நீடிக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications