For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியா தந்த அதிர்ச்சி...

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக மண்ணில் உயிர் விடவும் தயாராக இருக்கிறேன் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திகூறினார்.

சோனியா காந்தி பேசுகையில், நாட்டுக்காக எனது கணவர் உயிர் நீத்த இந்த மண்ணுக்கு நான் வந்துள்ளேன். அவர்ரத்தம் சிந்திய மண்ணில் நின்று கொண்டிருக்கிறேன்.

ராஜிவின் நினைவுகளை என்றும் என்னுடன் சுமந்து கொண்டிருக்கிறேன். எனக்கும் அவரைப் போலவே இங்குஉயிர் விடும் நிலை ஏற்படுமானால் அதை விடப் பெருமையான விஷயம் எனக்கு ஏதுமில்லை.

நாட்டுக்காக எனது உயிரை இதே மண்ணில் விடவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார் உணர்ச்சிவசப்பட்டு.

அப்போது கூட்டத்தினர் அதிர்ச்சியடைந்து, இல்லை, இல்லை உங்களுக்கு அதுபோல ஏதும் நடக்காது என்றுகோஷமிட்டனர்.

தொடர்ந்து சோனியா பேசுகையில், நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை எனக்கு எப்போதும்உண்டு. சிலர் என்னை வெளிநாட்டுக்காரர் என்ற வசை மாரி பொழிவதால் நான் கவலைப்படப் போவதில்லைஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X