இந்திராவின் மருமகளே, இந்தியாவின் திருமகளே
சென்னை:
சென்னை தீவுத் திடலில் நடந்த பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, சோனியா காந்தியைஇந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்று வாழ்த்தினார்.
இதை அருகில் இருந்த தயாநிதி மாறன், சோனியாவிடம் மொழி பெயர்த்துச் சொன்னபோதுசோனியா முகமெல்லாம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த ரியாக்ஷனைக் காட்ட, கூடியிருந்தலட்சக்கணக்கான கூட்டமும் கருணாநிதியையும் சோனியாவையும் வாழ்த்தி விண் அதிர கோஷம்எழுப்பியது.
கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், 1980ம் ஆண்டு காங்கிரஸுக்கும், திமுகவுக்கும்இடையே கூட்டணி ஏற்பட்டபோது, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று கலைஞர்வாழ்த்தினார். அது இப்போதும் நினைவில் நிற்கிறது என்றார்.
பின்னர் கருணாநிதி உரையாற்றுகையில், வாசனின் பேச்சைக் குறிப்பிட்டுப் பேசினார்.
தனது பேச்சின்போது, இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்றார்.
இதை ஆங்கிலத்தில் தயாநிதி மாறன் மொழி பெயர்த்து சோனியாவுக்குச் சொல்ல, பெரு மகிழ்ச்சியுடன்கருணாநிதியைப் பார்த்தார். பின்னர் கூட்டத்தைப் பார்த்து அவர் வணங்கினார். இதையடுத்து இருவரையும்வாழ்த்து கோஷம் எழுப்பியது கூட்டம்.