யார் பிரதமர்?: தேர்தலுக்கு பின்னரே முடிவு- கெளடா
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் எம்.பிக்களின் கூட்டத்தைக் கூட்டி யார் பிரதமர் என்பதுமுடிவு செய்யப்படும் என முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கூறியுள்ளார்.
திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தால் யார் பிரதமர்பதவியை ஏற்பது என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவு செய்யப்படும்.
கருத்துக் கணிப்புகள் சரியா, தவறா என்பதை முடிவு செய்ய வேண்டியது வாக்காளர்கள்தான். கருத்துக் கணிப்புகளை தடைசெய்வது என்பது கருத்துச் சுதந்திரம் சம்பந்தப்பட்டது. எனவே இதை தடை செய்வது கொஞ்சம் கடினமானதுதான் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications