தூத்துக்குடி: கப்பலில் இறந்த ரஷ்ய பொறியாளர்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் ரஷிய நாட்டைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் மரணமடைந்தார்.
சனிக்கிழமை பிற்பகல் ரஷியாவிலிருந்து சைப்ரஸ் நாட்டுக்கு ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போதுகப்பலில் இருந்த பொறியாளர் ரக்வியானிஸ்கி வெலே என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்த தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பல் திருப்பி விடப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தைகப்பல் நெருங்கியபோது வெலேயின் உடல் மோசமடைந்தது. துறைமுகத்தில் கப்பல் நின்றவுடன் அவரைமருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது அவர் மரணமடைந்திருந்தது தெரிய வந்தது.
அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications