பல்லடம் அருகே கள்ளச் சாராயத்துக்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் பல்லடம் அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 பேர் பலியானார்கள்.
பல்லடம் அருகே உள்ள மந்திரிபாளையம் என்ற இடத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடி வருகிறது. காக்கிகளை கள்ளச் சாராயகும்பல் கவனித்துவிடுதால் அவர்கள் இதைக் கண்டு கொள்வதில்லை.
இந் நிலையில் தேர்தலும் வந்ததால் சாராயம் அதிகமாகவே புழங்கியது. இரு நாட்களுக்கு முன் இங்கு கள்ளச்சாராயத்தைக் குடித்த பாலசுப்ரமணியம் என்ற விவசாயி, செம்மலை பண்டாரம் என்ற கோவில் பூசாரியும் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தனர்.












Click it and Unblock the Notifications