மே 17ம் தேதிக்குள் பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வருகிற திங்கள்கிழமைக்குள் (மே 17)பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஐந்தரை லட்சம் மாணவ, மாணவியர் பிளஸ் டூ தேர்வுகளை எழுதினர். விடைத்தாள் திருத்தும்பணி சமீபத்தில் முடிந்தது. தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதுமுடிவடையும்.
இதைத் தொடர்ந்து வருகிற திங்கள்கிழமைக்குள் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரம்தெரிவிக்கிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் இன்டர்நெட் மூலம் தேர்வு முடிவுகளை வெளியிட ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications