ஆந்திர முதல்வராகிறார் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி
ஹைதராபாத்:
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்திய, காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிஆந்திர மாநில முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்து, சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து தீவிரமாகப் போராடி, கட்சியின் மாபெரும்வெற்றிக்கு வித்திட்ட ராஜசேகர் ரெட்டி இன்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் முன்னிலையில் ஹைதராபாத்தில் நடந்த கூட்டத்தில் ரெட்டியைஎம்.எல்.ஏக்கள் தலைவராக தேர்வு செய்தனர். இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை சோனியா காந்திக்குவழங்கியும் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதையடுத்து ரெட்டியின் தேர்வை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நாளை மறுதினம் (14ம் தேதி) ரெட்டி முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். 55 வயதான ரெட்டிகலைக்கப்பட்ட ஆந்திர சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தார்.
நான்குமுறை எம்.பியாகவும் இருந்த ரெட்டி, இருமுறை முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டு அந்த வாய்ப்புகளைசென்னா ரெட்டி மற்றும் விஜய்பாஸ்கர் ரெட்டி ஆகியோரிடம் இழந்தார்.
கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்தாலும், ராஜசேகர் ரெட்டி எந்த மதச் சாயம் பூசிக் கொள்ளாதவர்.












Click it and Unblock the Notifications