17ம் தேதி திமுக கூட்டணி போராட்டம்
சென்னை:
சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளஅமைச்சர் இன்பத் தமிழனை கைது செய்யக் கோரியும், வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள்நீக்கப்பட்டதைக் கண்டித்தும் வரும் 17ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்நடத்தவுள்ளது.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கட்சித் தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று திமுக தலைவர் கருணாநிதிதலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
இதில் அதில் காங்கிரஸ் தலைவர் வாசன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்ஆகியோர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் தமிழகத்தில் சிறுபான்மையினர், அரசு ஊழியர்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து திட்டமிட்டுநீக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக அரசே காரணம். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதீர்மானம் நிறைவேற்றப்பட்து.
சிவகாசியில் மதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை துப்பாக்கியால் சுட்ட அமைச்சர் இன்பத்தமிழனைக் கைது செய்ய வேண்டும்என்றும் தீர்மானம் நிறைவேற்றிய தலைவர்கள், இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி மாநிலம் முழுவதும் கலெக்டர்அலுவலகங்கள் முன் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.