சோனியா பிரதமராவார்: காங்
டெல்லி:
காங்கிரசுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் 225 இடங்களும், இடதுசாரிக் கட்சிகளுக்கு 50இடங்களும் கிடைக்கும் என்று தெரிவதால் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்க உரிமைகோருவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அடுத்த பிரதமராக சோனியா காந்தி பதவியேற்பார் என்றும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது. ஆனால், சோனியா தான் பிரதமர் என்ற முடிவை கூட்டணிக் கட்சிகளின் மீதுதிணிக்க மாட்டோம் என்றும், அவர்களுடன் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும்அக் கட்சியின் மூத்த தலைவரான அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.
ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் காங்கிரசுக்கு ஆதரவு தரத் தயாராக இருப்பதாக முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக்கட்சியும், மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அறிவித்துள்ளன.
இதில் சமாஜ்வாடி 30 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 20 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இருகட்சிகளுக்கும் எப்போதுமே ஒத்து வராது என்றாலும் இருவரும் காங்கிரசை ஆதரிக்க முன்வந்துள்ளன. ஆனால், இக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனது கூட்டணிக் கட்சிகளின் உதவியைக்கொண்டே காங்கிரசால் ஆட்சியமைக்க முடியும் சூழல் நிலவுகிறது.