முரசொலி மாறன் வீட்டில் குடியேறும் வாஜ்பாய்
டெல்லி:
பா.ஜ.கவின் தோல்வியையடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகிய வாஜ்பாய் வீடு மாறுகிறார்.
பிரதமருக்கு ஒதுக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட எண் 7, ரேஸ் கோர்ஸ் இல்லத்தைஅவர் காலி செய்கிறார்.
அங்கிருந்து எண் 8, கிருஷ்ணமேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் குடியேறுகிறார். இந்த இல்லத்தில் தான்மறைந்த முன்னாள் மத்திய திமுக அமைச்சர் முரசொலி மாறன் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இல்லமும் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட பகுதியில் தான் அமைந்துள்ளது.
தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வசித்து வரும் எண் 10, ஜன்பத் இல்லம் பெரும் கூட்டங்களைசமாளிக்கும் வகையில் இல்லை. மேலும் பிரதமருக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுளும் அங்கு செய்வது கடினம்என்பதால் சோனியா காந்தி ரேஸ்கோர்ஸ் இல்லத்துக்கு குடிபெயர உள்ளார்.
அதிமுக.. அத்வானி..:
இந் நிலையில் மக்களவையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக வாஜ்பாயே இருப்பார் என பதவி விலகிச் செல்லும் துணைப் பிரதமர் அத்வானி தெரிவித்தார்.
இந்தப் பொறுப்பை ஏற்க வாஜ்பாய் ஆர்வம் காட்டவில்லை என்பதும், இந்தப் பதவி அத்வானிக்கே தரப்படவேண்டும் என ஆர்.எஸ்.எஸ்சும் வி.எச்.பியும் பா.ஜ.கவை நெருக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தான் காரணமா எனநிருபர்கள் அத்வானியிடம் கேட்டபோது, பதிலளித்த அவர், அப்படியெல்லாம் ஏதும் இல்லை. அப்படி நாங்கள்நினைக்கவே இல்லை என்றார்.
பந்த் ராஜினாமா:
பா.ஜ.கவின் தோல்வியையடுத்து அக் கட்சியால் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட கே.சி.பந்த்தனது பதவியை ராஜினாமா செய்தார்.












Click it and Unblock the Notifications