For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கோவை பாஜகவினர் போர்க்கொடிஉயர்த்தியுள்ளனர்.

தமிழக மக்களவைத் தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா அரசு மீதான மக்களின்அதிருப்தியையும் மீறி அதிமுகவுடன் கூட்டணி வைத்ததும், ரஜினி கொடுத்த ஆதரவை முறையாக பயன்படுத்திக்கொள்ளாததுமே தோல்விக்குக் காரணம் என்று பாஜக தலைவர்களில் சிலர் பகிரங்கமாகவே கூறத் தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில் பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மீதும் சிலர் அதிருப்தியை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். அவரும்,சுகுமாறன் நம்பியாரும்தான் அதிமுக கூட்டணிக்கு கடுமையான முயற்சி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான கோவையில் அவருக்கு எதிராக திடீரென்று சுவரொட்டிகள்ஒட்டப்பட்டுள்ளன. கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலக வளாகத்தில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக தோல்விக்குக் காரணமான சிபி.ராதாகிருஷ்ணன் உடனடியாக தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றுசுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது. இதை யார் ஒட்டியது என்று தெரியாவிட்டாலும், கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்கள்தான்இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்று கட்சியினர் கருதுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X