எஸ்.எஸ்.சந்திரனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
சேலம்:
சேலம் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சேலத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதால்எஸ்.எஸ்.சந்திரனை எதிர்த்து திமுகவினர் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சந்திரன் உத்தரவின் பேரில்அதிமுகவினர், திமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் 9 அதிமுகவினர் மீது சேலம் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கு அவருக்கு முன் ஜாமீன்வழங்கப்பட்டது. மேலும், சேலம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜராகுமாறும் சந்திரனுக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சந்திரன் சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி ரவிச்சந்திரன் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கினார்.ரூ. 1.5 லட்சம் ரொக்க ஜாமீன், தினசரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என எஸ்.எஸ்.சந்திரனுக்கு நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications