கமாண்டோ படை பாதுகாப்பில் மன்மோகன் சிங்
டெல்லி:
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதியாக ஒரு விஞ்ஞானியும், பிரதமராக பொருளாதார நிபுணரும்பதவி வகிக்க உள்ளனர்.
அதே போல ஜனாதிபதி அப்துல் கலாமும் பிரதமராகவுள்ள மன்மோகன் சிங்கும் சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்தவர்கள்.
மன்மோகன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து பஞ்சாப் முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்தேறிவருகின்றன.
தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஜெயில் சிங், குடியரசுத் தலைவராக இருந்திருந்தாலும் பிரதமராக வருவது இதுவேமுதல்முறை எனபதால், குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகளை சீக்கியர்கள் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் அவரது வீட்டை நேற்று முதல் ஆயிரக்கணக்கான சீக்கிய மக்கள் முற்றுகையிட்டு வாழ்த்து கோஷம்எழுப்பி வருகின்றனர்.
அரசியலில் இருந்தாலும் டெல்லியில் தனது மனைவி 3 மகள்களுடன் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தவர்மன்மோகன் சிங். திடீரென பிரதமராக்கப்பட்டதால், அவரது வீட்டுக்கு நேற்றிரவு முதல் கமாண்டோ படைபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரது வீட்டுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இன்று முதல் புல்லட் புரூப் காரும் சிங்குக்குவழங்கப்படவுள்ளது. நேற்றிரவு முதலே அவர் கருப்புப் பூனைப் படை பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுவிட்டார்.
அவரது மனைவி, மகள்களுக்கும் டெல்லி போலீசாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications